பொங்கல் தொடர் விடுமுறை எதிரொலி - கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

பொங்கல் விடுமுறை தினத்தையொட்டி கோவை குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் குவிந்ததால் அப்பகுதியே களைகட்டியது.



கோவை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14ம் தேதி மகாசங்கராந்தியும், ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையும், 16ம் தேதி மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்பட்டது.

இதையடுத்து, ஜனவரி 17ம் தேதியான இன்று காணும் பொங்கல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. கடற்கரை, பூங்காக்கள், அருவிகள் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சென்று மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்வதே காணும் பொங்கல் தினச் சிறப்பு.



அந்த வகையில், காணும் பொங்கல் தினத்தையொட்டி கோவையில் உள்ள மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கோவை குற்றாலத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.



குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் உறவினர்கள், நண்பர்களுடன் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.



பின்னர், தாங்கள் கொண்டுவந்திருந்த இனிப்புகள், உணவுப் பண்டங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு காணும் பொங்கல் தினத்தை உற்சாகமாக் கொண்டாடினர்.



பொங்கல் விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் ஒரே நேரத்தில் கோவைக் குற்றாலத்தில் குவிந்ததால் நுழைவுச் சீட்டு பெறுவதற்கு பல மணி நேரம் நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.



மக்கள் கூட்டத்தையொட்டி, கோவை குற்றாலம் பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...