பொங்கல் தொடர் விடுமுறை எதிரொலி - கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

பொங்கல் விடுமுறை தினத்தையொட்டி கோவை குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் குவிந்ததால் அப்பகுதியே களைகட்டியது.



கோவை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14ம் தேதி மகாசங்கராந்தியும், ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையும், 16ம் தேதி மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்பட்டது.

இதையடுத்து, ஜனவரி 17ம் தேதியான இன்று காணும் பொங்கல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. கடற்கரை, பூங்காக்கள், அருவிகள் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சென்று மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்வதே காணும் பொங்கல் தினச் சிறப்பு.



அந்த வகையில், காணும் பொங்கல் தினத்தையொட்டி கோவையில் உள்ள மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கோவை குற்றாலத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.



குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் உறவினர்கள், நண்பர்களுடன் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.



பின்னர், தாங்கள் கொண்டுவந்திருந்த இனிப்புகள், உணவுப் பண்டங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு காணும் பொங்கல் தினத்தை உற்சாகமாக் கொண்டாடினர்.



பொங்கல் விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் ஒரே நேரத்தில் கோவைக் குற்றாலத்தில் குவிந்ததால் நுழைவுச் சீட்டு பெறுவதற்கு பல மணி நேரம் நீண்டவரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.



மக்கள் கூட்டத்தையொட்டி, கோவை குற்றாலம் பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...