தமிழகத்தில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை தீர்வு வழங்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கோவை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை 15 நாட்களுக்குள் வேருடன் முழுமையாக அப்புறப்படுத்த பட்டா உரிமையாளர்கள் முன்வரவேண்டும்.
சீமைக் கருவேல மரங்களால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதுடன் காற்று வெளியில் உள்ள ஈரப்பதமும் உறிஞ்சப்படுகிறது. இதனால், மழை மேகங்கள் திரண்டு மழை பொழிவது தடுக்கப்படுகிறது.
பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு நம் நாட்டில் மழைவளம், நீர்வளம் காத்திட சீமை கருவேல மரங்களை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்". இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கோவை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை 15 நாட்களுக்குள் வேருடன் முழுமையாக அப்புறப்படுத்த பட்டா உரிமையாளர்கள் முன்வரவேண்டும்.
சீமைக் கருவேல மரங்களால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதுடன் காற்று வெளியில் உள்ள ஈரப்பதமும் உறிஞ்சப்படுகிறது. இதனால், மழை மேகங்கள் திரண்டு மழை பொழிவது தடுக்கப்படுகிறது.
பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு நம் நாட்டில் மழைவளம், நீர்வளம் காத்திட சீமை கருவேல மரங்களை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்". இவ்வாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.