திருப்பூரில் தமிழர் பேரவையின் சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில், பறை இசையை சிறுவர்கள் இசைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் தமிழர் பேரவையின் சார்பில் 31 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழாவில் அழிந்து வரும் பறை இசையைச் சிறுவர், சிறுமியர்கள் இசைத்ததைப் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திருப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.
இந்நிலையில் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள தமிழர் பேரவையின் சார்பில் 31ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் திருவிழா மூன்று நாட்களாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் இன்று பள்ளி குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து அழிந்து வரும் கலைகளில் ஒன்றான பறை இசையைச் சிறுவர், சிறுமியர் இசைத்ததைப் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.