திருப்பூர் பல்லடம் அருகே மயான பூமியை ஆக்கிரமித்து திறக்கப்பட்ட திமுக அலுவலகம் - பொதுமக்கள் அதிருப்தி

பல்லடம் அடுத்த மாதப்பூர் ஊராட்சியில் மயான பூமியை ஆக்கிரமித்து திமுக கட்சி அலுவலகம் அமைக்கப்பட்ட நிலையில், பொங்கல் விடுமுறையை பயன்படுத்தி நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாதப்பூர் ஊராட்சி தலைவராக பாஜகவை சேர்ந்த அசோக்குமார் தலைவராக உள்ளார்.



இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வந்த நிலையில் மாதப்பூர் கிராமத்தில் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள இடத்தில் இன்று காலை திமுக தோரணம் மற்றும் கட்சிக் கொடியுடன் கட்சி அலுவலக திறப்பு விழா நடைபெற்றதாக தெரிகிறது.

இந்த கட்டிடம் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் நூலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் நிறைந்த பகுதியில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டிடம் அமைந்துள்ள இடமானது மயான பூமி எனவும் கூறப்படுகிறது.

விடுமுறை நாட்களை பயன்படுத்தி மயான பூமியை ஆக்கிரமித்து திமுக கட்சி அலுவலகம் திறக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து பல்லடம் தாசில்தாரிடம் கேட்டபோது, முறையாக ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், பொங்கலூர் ஒன்றிய சேர்மன் குமாரிடம் கேட்டபோது, திறக்கப்பட்டது ஏற்கனவே அங்கிருந்த டீக்கடை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...