உதகை அடுத்த கல்லட்டி சோதனை சாவடியில் உலா வந்த சிறுத்தை - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

கல்லட்டி சோதனை சாவடி அருகே நள்ளிரவில் உலா வந்த சிறுத்தை குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் கல்லட்டி மலை பாதையும் ஒன்று. 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதை மிகவும் ஆபத்தானதாகவும் கருதப்படுகிறது.

இந்த பகுதியில் வனவிலங்குகள் வேட்டை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை கண்காணிக்கும் வகையில், வனத்துறை சார்பாக சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

உதகையில் இருந்து மசினகுடி செல்லும் பொதுமக்களும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணிகளும் இந்த மலைப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.



இந்த நிலையில் மலை பாதையில் உள்ள 15-வது கொண்டை ஊசி வளைவில் அமைந்துள்ள சோதனை சாவடி அருகே இரவு நேரங்களில் அடிக்கடி சிறுத்தை ஒன்று உலா வருவதால், இரவுநேர பணியில் இருக்கும் ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்ற வேண்டிய சூழலில் இருப்பதாக கூறுகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி சோதனை சாவடி அருகே சிறுத்தை உலா வந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...