கிணத்துக்கடவு அருகே சாலை விபத்தில் காயம்: சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழப்பு

கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளத்தில் சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு.


கோவை: கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த பெண் உயிரிழந்தார்.

கோவை சரவணம்பட்டி அம்மன் நகர் பகுதி சேர்ந்த சிகாமணி. இவரது மனைவி ராணியும், மகன் அரவிந்த்தும் கடந்த 14ஆம் தேதி வால்பாறை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பகுதி வழியாக செல்லும் பொள்ளாச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம், அரவிந்த் சென்ற வாகனம் மீது வேகமாக மோதியது.

இதில் அரவிந்த்துக்கும், பின்னால் அமர்ந்திருந்த ராணிக்கும், பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் பலத்த காயமடைந்த ராணியை மேல்சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த ராணி நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...