'மருத்துவ காப்பீடு திட்டத்தில் பிரதமர் மோடி படம் இருக்க வேண்டும்' - திருப்பூர் பாஜகவினர் கோரிக்கை

மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்படுத்தும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பிரதமர் மோடியின் புகைப்படமும் இடம்பெற வேண்டும் எனக் பாஜகவினர் கோரிக்கை.



திருப்பூர்: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், மாநில அரசுத் திட்டமா? மத்திய அரசுத் திட்டமா? என்று திருப்பூர் பாஜக விவசாய அணியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி திட்டப்பொருப்பாளர் அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:



தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் குறித்து மருத்துவமனைகளில் விழிப்புணர்வு தகவல் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழக அரசின் இந்நாள் முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் விளம்பரத்தில் PMJAY எனக் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு விரிவாக்கம் பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத போஜனா என்பதாகும். இத்திட்டம் மத்திய அரசின் திட்டம் என்பதால் இதன் மூலம் பனை, தென்னை தொழிலாளர்கள் பயனடைவார்கள்.

இத்திட்டத்தின் மூலமாக சுமார் 1300-க்கும் மேற்பட்ட நோய்களுக்குச் சிகிச்சை பெறலாம். மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ஆண்டொன்றிற்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவச் சிகிச்சை பெற முடியும்.

மத்திய அரசின் திட்டத்தைத் தமிழக அரசு விளம்பரப்படுத்தும் போது பிரதமரின் புகைப்படத்தையும் இடம் பெற வேண்டும். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மாநில அரசுத் திட்டமா? அல்லது மத்திய அரசுத் திட்டமா என விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்குப் பதில் மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்படுத்தும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பிரதமர் மோடியின் புகைப்படமும் இடம்பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...