உடுமலையில் மாட்டுவண்டியில் அமைச்சர் சாமிநாதன் பயணம் - ஆல்கொண்டமால கோயிலில் தரிசனம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகிலுள்ள ஆல் கொண்ட மால கோயிலுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாட்டுவண்டியில் சென்று சாமி தரிசனம் செய்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சோமவாரப்பட்டியில் ஆல் கொண்ட மால கோவில் உள்ளது.



இந்தக் கோயிலுக்கு சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் மாட்டுவண்டிகளில் பயணித்து சாமி தரிசனம் செய்வது பாரம்பரியமாக நடைபெற்றுவருகிறது.

பொங்கல் பண்டிகையின்போது, இந்தக் கோயிலில் நடைபெறும் சலக்கெருது ஆட்டமும் மிகவும் பிரசித்திபெற்றது. இந்த ஆண்டுக்கான பொங்கல் திருவிழா கடந்த 16ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், நிறைவு நாளான தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மாட்டு வண்டியில் பயணம் செய்து, ஆல்கொண்டமால கோயிலுக்குச் சென்றார்.



அப்போது, கோயில் நிர்வாகம் சார்பில் அமைச்சருக்கு பரிவட்டம் கட்டி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...