கோவையில் ஜாவா ஷோரூமில் திடீர் தீ விபத்து: பல லட்சம் மதிப்புள்ள சொகுசு பைக்குகள் தீக்கிரை!

கோவை - அவினாசி சாலையில் செயல்பட்டு வந்த ஜாவா ஷோரூமில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், சர்வீஸ் செய்வதற்கு விடப்பட்டிருந்த, பல லட்சம் மதிப்பிலான 7 சொகுசு பைக்குகள் முழுவதும் தீயில் எரிந்து சேதமாகின.


கோவை: கோவை - அவினாசி சாலையில் ஜாவா எனப்படும் இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் ஷோரூம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஷோரூமில் பலவகையான சொகுசு பைக்குகள் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஷோரூமில் ஏற்கனவே 9 இருசக்கர வாகனங்கள் சர்வீஸ் செய்வதற்கு விடப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இந்த ஷோரூமில் நேற்றைய தினம் (18.01.2023) நள்ளிரவு ஒரு மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அவ்வழியாக சென்ற ஒருவர் தீ கொழுந்து விட்டு எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.



இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான 7 இருசக்கர வாகனங்கள் முழுவதுமாக தீக்கிரையாகின.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தீ விபத்து தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த ஷோரூமிற்கு காவலாளி இல்லாததால் தீ முழுமையாக பரவிய பிறகு வெளியில் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...