வேங்கைவயல் விவகாரம் - உதகையில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக உதகையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.


கோவை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் உள்ள உயர்மட்ட குடிநீர் தொட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சில சமூகவிரோதிகள் மனித மலத்தை கலந்தனர். இந்த சம்வபவம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 5-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.



இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றபட்டுள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் சார்பாக குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பத்தை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தபட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக உதகை மத்திய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மாவட்ட தலைவர் சகாதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...