ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி சூலூரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியுறுத்தி கோவை சூலூர் அருகே வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி வி.எம்.சி மனோகர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் புதிய பேருந்து நிறுத்தம் அருகே ஆளுநர் ஆர்.என்.ரவியை, மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை புறநகர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி.எம்.சி மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு, சட்டப் பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதத்தை கண்டித்தும், ஆன்லைன் ரம்மி, நீட் தேர்வு உள்ளிட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.எம்.சி. மனோகரன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநரின் செயல்பாடுகள் தமிழ்நாட்டுக்கு எதிரானதாகவே இருந்து வருகிறது.

சட்டமன்ற மாண்பை கெடுக்கும் விதமாகவும் ஆன்லைனில் உள்ளிட்ட விளையாட்டுக்கு தடை செய்யும் மசோதாவை அங்கீகரிக்காமல் இருந்து வரும் ஆளுநரின் செயல்பாடு கண்டனத்துக்குரியது, என்றார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...