உடுமலையில் அன்னாசிப் பழம் விற்பனை அமோகம்

கேரளாவில் அன்னாசிப் பழ உற்பத்தி அதிகரித்துள்ளதால் உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் பழங்கள் விற்பனைக்காக அதிகளவு குவிந்துள்ளன.


திருப்பூர்: அன்னாசிப் பழ சீசன் தொடங்கியுள்ளதால், உடுமலைப் பகுதியில் விற்பனை களைக்கட்டியுள்ளது. மக்கள் ஆர்வமுடன் அன்னாசிப் பழங்களை வாங்கி செல்கின்றனர்.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் அன்னாசிப் பழ விவசாயம் அதிகளவு நடைபெறுகிறது. அங்குள்ள வாழக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் பல ஆயிரம் ஏக்கரில் அன்னாசிப் பழ சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அப்பகுதியில் விளையும் கன்னராக்க என்ற ரகத்துக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. எனவே இந்த ரகம் வாழக்குளம் பகுதியிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.



பிற ரக அன்னாசியும் பரவலாக உற்பத்தியாகிறது. நடப்பாண்டு உற்பத்தி வழக்கத்தை விட அதிகரித்துள்ளதால் விலை சரிவைத் தவிக்கத் தமிழக -கேரளா எல்லைப் பகுதியில் அன்னாசிப் பழங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.



அவ்வகையில், உடுமலை பகுதிக்கு மூணாறு வழியாக அன்னாசிப் பழங்கள் கொண்டு வரப்பட்டுத் தரத்தின் அடிப்படையில் பழம் ரூ.30 முதல் விற்பனை செய்யப்படுகிறது நாள்தோறும் 5 லோடு அளவுக்கு அன்னாசி கொண்டு வரப்படுகிறது.

அன்னாசிப் பழ சீசனை யொட்டி இப்பகுதியில் விற்பனை அதிகளவு இருக்கும். எனவே அதைத் திட்டமிட்டு பழங்களைக் கொண்டு வந்து விற்பனை செய்கிறோம் என வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...