கோவை கிணத்துக்கடவு அருகே சேவல் சண்டை சூதாட்டம் - 3 பேர் கைது

கிணத்துக்கடவு அடுத்த கோவில்பாளையம் அருகே பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம் நடத்திய மூன்று பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த சேவல் மற்றும் ரூ.300 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தப்படுவதாக கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், காணியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன், முள்ளுப்பாடி பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்த சேவல் மற்றும் 300 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...