கோவை மாவட்டத்தில் மதுபழக்கம் மற்றும் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கான மருத்துவ முகாமினையும் மாவட்ட ஆட்சியர் துவக்கிவைத்து பார்வையிட்டார்.


இந்நிகழ்வுகளின் போது கோவை மாவட்ட துணை ஆணையர் (கலால்) து.வெங்கடேசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.