கோவை துடியலூரில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு செயல்பாடுகளில் தலையிடுவதைக் கண்டித்து துடியலூரில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம்.


கோவை: துடியலூரில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து அகில இந்தியக் காங்கிரஸ் வடக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே வடக்கு மாவட்ட அகில இந்தியக் காங்கிரஸ் சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாவட்டத் தலைவர் பி.வி.மணி தலைமை தாங்கினார். பெரியநாயக்கன்பாளையம் வட்டார தலைவர் மோகன்ராஜ் வரவேற்றுப் பேசினார்.



மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ் குமார், பொதுச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, பொறுப்பாளர் சின்னு ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு செயல்பாடுகளில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும், ஆளுநர் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சுரேந்திரபாபு, நாகராஜ், எஸ் எஸ் குளம் வட்டார தலைவர் ஆனந்தகுமார், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூரியகுமார், பார்த்திபன், சதீஷ்குமார், காதர் பாய், சசிகுமார், அசோக், சிங்காரவேலு, மருதகிரி ராஜேந்திரன், ஜே.வி.எஸ் மணி, கார்த்தி, வைகை ரஃபிக், மனோகர், வடிவேல், வேலுமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...