பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் பிளேடால் கழுத்தறுத்து கைதி தற்கொலை முயற்சி

பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் கைதி ஒருவர் திடீரென பிளேடால் கழுத்தை அறுத்து, போலீசார் முன்னிலையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு.


திருப்பூர்: பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் திருட்டு வழக்கில் கைதான வாலிபர் விசாரணைக்கு அழைத்து வந்தபோது போலீசார் முன்னிலையில் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.



மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (29), இவர் திருப்பூர் மாவட்டம் அனுப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த ஆண்டு நடந்த திருட்டு வழக்கில் காமநாயக்கன்பாளையம் காவல்நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த கருப்பசாமி வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து கருப்பசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி பிடியாணையை நீதிபதி பிறப்பித்தார். இந்நிலையில் பல்லடம் பகுதியில் கருப்பசாமி பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து காமநாயக்கன்பாளைய போலீசார் அங்குச் சென்று கருப்பசாமியைக் கைது செய்து பல்லடம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கருப்பசாமியைச் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் பாதுகாப்புடன் கருப்பசாமியை அழைத்துச்சென்ற போது திடீரென யாரும் எதிர்பாராதவிதமாகத் தனது கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் கருப்பசாமியை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.



அதேபோன்று கருப்பசாமி மனைவி மஞ்சுளாவும், பிளேடால் கீறி தற்கொலைக்கு முயன்றார். அவரையும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் போலீசாரின் பாதுகாப்பில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்த கைதியிடம் ஆயுதம் எவ்வாறு வந்தது? போலீசார் கைதியை ஆஜர்படுத்தும் போது ஏன் சோதனை மேற்கொள்ளவில்லை?எதனால் கைதி தற்கொலை முயற்சி மேற்கொண்டார்? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் கணவன், மனைவி இருவரும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...