சிங்காநல்லூர் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை மீட்டுத்தரக்கோரி இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 64-வது வார்டு, சிங்காநல்லூர் உழவர் சந்தையின் பின்புறம் விளையாட்டு மைதானம் உள்ளது.
இந்த விளையாட்டு மைதானம் சில தனியார்களால் வாகனங்கள் நிறுத்துவதற்கும், கோவை மாநகராட்சியின் தெருவிளக்கு கம்பங்களை போட்டு வைக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதுமட்டுமில்லாமல் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் அப்பகுதியில் சரிவர இயங்குவது இல்லை.
இதனால், அப்பகுதி மக்களும், இளைஞர்களும் விளையாட்டு மைதானத்தினை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், மைதானத்தை சுற்றிவளர்ந்துள்ள புதர்களையும் அகற்றி, விளையாட்டு மைதானத்தை பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.