கோவை தேவராயபுரத்தில் வெங்கடேச பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
கோவை: கோவை தேவராயபுரம் ஆக்கிரமிப்பிலிருந்த வெங்கடேச பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
கோவை தொண்டாமுத்தூர் பரமேஷ்வரன் பாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான சுமார் 24.7 ஏக்கர் நிலங்கள் தேவராயம்புரம் பகுதியில் உள்ளது. இந்த நிலங்களைக் கடந்த 25 ஆண்டுகளாக அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரராஜன், ராமசாமி, சீனிவாச ஐயங்கார், ஆனந்தகிருஷ்ணன் ஐயங்கார், உள்ளிட்ட 5 பேர் ஆக்கிரமிப்பு செய்து கத்திரிக்காய், தக்காளி உள்ளிட்ட பல்வேறு சாகுபடிகளைச் செய்து வந்தனர்.
இது குறித்து கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, கோவிலுக்குச் சொந்தமான சுமார் 25 கோடி மதிப்பிலான 24.7 ஏக்கர் கோவில் நிலத்தை மீட்டனர்.

மேலும் அங்கு இது குறித்தான அறிவிப்புப் பலகை வைத்தனர்.
கோவை தொண்டாமுத்தூர் பரமேஷ்வரன் பாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான சுமார் 24.7 ஏக்கர் நிலங்கள் தேவராயம்புரம் பகுதியில் உள்ளது. இந்த நிலங்களைக் கடந்த 25 ஆண்டுகளாக அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரராஜன், ராமசாமி, சீனிவாச ஐயங்கார், ஆனந்தகிருஷ்ணன் ஐயங்கார், உள்ளிட்ட 5 பேர் ஆக்கிரமிப்பு செய்து கத்திரிக்காய், தக்காளி உள்ளிட்ட பல்வேறு சாகுபடிகளைச் செய்து வந்தனர்.
இது குறித்து கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, கோவிலுக்குச் சொந்தமான சுமார் 25 கோடி மதிப்பிலான 24.7 ஏக்கர் கோவில் நிலத்தை மீட்டனர்.
மேலும் அங்கு இது குறித்தான அறிவிப்புப் பலகை வைத்தனர்.