உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைவு

பருவமழை பொய்த்துப் போனதால் உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்துக் குறைந்துள்ளது. இதனால் இரண்டாம் போகத்திற்குத் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை உருவாகும்.


திருப்பூர்: உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களைக் கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அளிக்கிறது.

இதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்குப் பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது.

அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் மழை போதிய அளவு பெய்ததால் அணை முழு கொள்ளளவை எட்டியது. மேலும் தொடர் மழை காரணமாக அணையின் முழு கொள்ளளவு நீர்மட்டம் 2 மாதம் நீடித்தது.



இதைத் தொடர்ந்து நெல் சாகுபடிக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த சூழலில் 2ஆம் போக நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, நாற்றங்கால் பருவமழை காலங்களில் அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்தை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி செய்து வருகின்றோம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக்குப் பின்பு அவ்வப்போதும் மழை பெய்து வந்ததால் பருவநிலை மாற்றம் ஏற்படவில்லை.

இதனால் பயிர்களும் நோய் தாக்குதலிலிருந்து தப்பித்து நல்ல முறையில் வளர்ந்து அறுவடையை எட்டியது. தற்போது 2ஆம் போகச் சாகுபடியைத் தொடங்கி உள்ளோம். நாற்றங்கால் அமைத்து நிலத்தை உழுது பண்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம்.



இந்த சூழலில் அணையின் நீராதாரங்களில் நிலவுகின்ற வெப்பத்தின் தாக்குதல் காரணமாக நீர்வரத்து குறைந்து அணையின் நீர் இருப்பும் சரிந்து வருகிறது. இதனால் நெற் பயிர்கள் அறுவடையை எட்டும் சூழலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது, என்றனர்.

தற்போது நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 80.94அடி உயரத்திற்குத் தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 108 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது.



அணையிலிருந்து வினாடிக்கு 890 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...