உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு

உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தைப் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்ய விவசாயிகள் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு.


திருப்பூர்: உடுமலையில் 48 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தைப் பொள்ளாச்சிக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதால் தொழில்துறையினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 48 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் உடுமலை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தைப் பொள்ளாச்சிக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதால் தொழில்துறையினர் விவசாயிகள் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது, உடுமலை பகுதியில் நூல் மற்றும் காகித ஆலைகள் எனத் தொழில் வளர்ச்சிக்கும், விவசாயம் மற்றும் நகர வளர்ச்சிக்கும் பெரிதும் துணையாக மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அமைந்தது.

அப்போது திமுகவில் சாதிக் பாட்ஷா, கண்ணப்பன் என்ற இரு அமைச்சர்கள் நடத்திய பெரும் போராட்டத்திற்குப் பின் உடுமலையில் மின் பகிர்மான வட்டம் உருவாக்கப்பட்டு அன்று முதல் தற்போது வரை செயல்பட்டு வருகின்றது.

மின் இணைப்பு வழங்குதல், புதிய திட்டங்களை உருவாக்குதல், மின் கம்பம் தயாரிப்பு, மின் மீட்டர்கள், டிரான்ஸ்பார்ம்கள் பராமரிப்பு, பழுது நீக்குதல் என ஏராளமான பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

உடுமலை மின் பகிர்மான வட்டத்தில் 49 பிரிவு அலுவலகங்கள் இருந்தாலும், உடுமலை, மடத்துக்குளம், பெதப்பம்பட்டி, தேவனூர்புதூர் என உடுமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளிலேயே அதிக மின் இணைப்புகள் உள்ளன.

தற்போது பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள பிரிவு அலுவலகங்களைப் பிரித்து ஒரு செயற்பொறியாளர் அலுவலகம் கூடுதலாக உருவாக்கவும், கூடுதலாகப் பிரிவு அலுவலகங்கள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் உடுமலையில் மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் இருப்பது சரியானதாக இருக்கும்.



ஆனால் தற்போது எந்த விதமான காரணமும் இல்லாமல், சொந்த கட்டிடத்தில் செயல்படும் ஒரு அலுவலகத்தை வாடகை கட்டிடத்திற்கு மாற்றுவது ஏன். உடுமலையிலிருந்து மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் மாற்றப்பட்டால் மின்துறை சார்ந்த வளர்ச்சி பாதிப்பதோடு மின் இணைப்புகள் வழங்குதல் மற்றும் அதிகாரிகள் மீதான புகார்கள் என அனைத்து பணிகளுக்கும் பொள்ளாச்சிக்குச் செல்ல வேண்டும் நிலை ஏற்படும்.

ஆகையால் உடுமலை மின் பகிர்மான வட்டத்தைப் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்படுவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் விவசாயிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...