ஜெபக்கூட்டம் நடத்தப் பாதுகாப்பு வழங்குமாறு மாவட்ட எஸ்.பியிடம் மனு

ஜெபக்கூட்டம் நடத்த இடையூறு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு தங்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு வழங்கல்.


கோவை: ஜெபக்கூட்டம் நடத்துவதற்குச் சிலர் இடையூறு செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவை பிரஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜேக் நேசகுமார். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.



அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, கோவை பிரஸ் காலனியில் உள்ள சக்தி நகர் இரண்டாவது வீதியில் ஏல்பெத்தேல் ஜெப வீடு என்ற பெயரில் ஜெபக்கூட்டம் நடத்தி வருகிறேன். கடந்த 2018ஆம் ஆண்டு அதேப் பகுதியைச் சேர்ந்த கோபால், ராஜேஷ், லாரன்ஸ் ஆகிய மூன்று பேரும் ஜெபக்கூட்டம் நடத்த இடையூறு செய்தனர்.

இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, ஜெப வீட்டில் ஜெப கூட்டம் நடத்தலாம் என உத்தரவு பெறப்பட்டு அமைதியான முறையில் ஜெபக்கூட்டம் நடத்தி வருகிறேன். இந்நிலையில் மீண்டும் அவர்கள் இடையூறு செய்தும், ஜெப கூட்டத்தில் வருபவர்களையும் மிரட்டியுள்ளனர். மேலும் ஜெப வீட்டைப் பழுது பார்த்த போது சில நபர்களுடன் வந்து பணிகளைத் தடுத்து நிறுத்தனர்.

நீதிமன்ற அனுமதி பெற்று ஜெபக்கூட்டம் நடத்தி வந்த நிலையில், தற்பொழுது இவர்களால் ஜெபக்கூட்டம் நடத்தாமல் இருப்பது தனக்கு மன உளைச்சலை தருகிறது. எனவே நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜெப வீடு நடத்த அனுமதியும், பாதுகாப்பும் வழங்க ஆவணம் செய்யுமாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...