பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் அனைத்து பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்


காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் அ.தி.மு.க  வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் விடுதியருகே செய்தி சேகரிக்கச்சென்ற பத்திரிக்கியாளர்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், பத்திரிக்கையாளர்களின் செல் போன்கள் மற்றும் காமிரா உள்ளிட்ட உபகரணங்களையும் பிடுங்கிச்சென்றனர். 

இதை தொடர்ந்து, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிக்கையாளகள் இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

 

பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று அனைத்து பத்திரிக்கையாளர்கள் கூட்டமைச்சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமீப காலமாக பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.



தொடர்ந்து, அனைத்து பத்திரிக்கையாளர்களிடமும் கையொப்பம் பெறப்பட்டு, அத்தோடு கடிதத்தை இணைத்து அதை தமிழக கவர்னருக்கு அனுப்ப உள்ளதாகவும் பத்திரிக்கையாளர்கள் தெரிவித்தனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...