காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் அ.தி.மு.க வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் விடுதியருகே செய்தி சேகரிக்கச்சென்ற பத்திரிக்கியாளர்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், பத்திரிக்கையாளர்களின் செல் போன்கள் மற்றும் காமிரா உள்ளிட்ட உபகரணங்களையும் பிடுங்கிச்சென்றனர்.
இதை தொடர்ந்து, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிக்கையாளகள் இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று அனைத்து பத்திரிக்கையாளர்கள் கூட்டமைச்சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமீப காலமாக பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து, அனைத்து பத்திரிக்கையாளர்களிடமும் கையொப்பம் பெறப்பட்டு, அத்தோடு கடிதத்தை இணைத்து அதை தமிழக கவர்னருக்கு அனுப்ப உள்ளதாகவும் பத்திரிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
