தாராபுரத்தில் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கண் சிகிச்சை முகாம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.


திருப்பூர்: சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் கோவை லோட்டஸ் கண் மருத்துவமனை இணைந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது.

தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் சி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆர்.டி.ஓ. குமரேசன் முகாமை தொடங்கிவைத்தார்.

இந்த முகாமில், கோவை லோட்டஸ் கண் மருத்துவமனை முதுநிலை கண் பரிசோதகர் டாக்டர் நிவேதா மற்றும் கண் மருத்துவ குழுவினர் முகாமில் கண் பரிசோதனை, ரத்த பரிசோதனை, கண் ரத்த அழுத்த பரிசோதனை, மாலைக்கண், கண்ணில் சதை வளர்ச்சி, கண்ணில் சீழ் வடிதல், கண் புரை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர்.

இந்தப் பரிசோதனையில் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச கண்ணாடி வழங்கி அவர்களை உயர் சிகிச்சைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. பிறகு, அவர்களுக்கு சாலை விதிகள் குறித்து அச்சிடப்பட்டுள்ள புத்தகம் மற்றும் துண்டு பிரசுரங்களை ஆர்.டி.ஓ. குமரேசன் வழங்கினார். சாலை விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த கண் சிகிச்சை முகாமில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக நேர்முக உதவியாளர் ராஜாராம் உள்ளிட்ட ஏராளமான ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...