மாணவர்களை யாகபூஜைக்கு அழைத்து சென்ற தனியார் பள்ளி - உடுமலையில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

உடுமலைப்பேட்டையில் தனியார் பள்ளி மாணவர்களை யாக பூஜையில் பங்கேற்க வைத்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களை யாக பூஜைக்கு பள்ளி நிர்வாகம் யாக பூஜைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்றது.



இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உடுமலை ஒன்றிய செயலாளர் தமிழ்த்தென்றல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பள்ளி வேளையில் கல்வி கற்க வேண்டிய மாணவர்களை அரசியல் சாசனத்திற்கு எதிராக மதம் சார்ந்த நிகழ்வில் பங்கெடுக்க வைத்த பள்ளி நிர்வாகத்தின் மீதும் அதற்கு துணையாக இருந்த அதிகாரிகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்களின் மீது தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் உடனடியாக தீவிர விசாரணை மேற்கொண்டு தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி வளாகங்களில் மதம் சார்ந்த நிகழ்வுகளை அனுமதிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.



ஆர்ப்பாட்டத்தில், இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளர் பிரவீன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முன்னாள் தாலுகா செயலாளர் கி.கனகராஜ், முன்னாள் மாவட்ட பொருளாளர் ஓம் பிரகாஷ், கமிட்டி உறுப்பினர் லோகேஷ்வரன் ஆகியோர் கலந்து கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

மேலும், இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நிர்வாகிகள் கார்த்தி, மகேந்திரன், கருப்பசாமி, சுப்ரமணி, அய்யனார், மாதர் சங்கம் சசிகலா, சி.ஐ.டி.யூ நிர்வாகிகள் ஜெகதீசன், ரங்கநாதன், காளிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...