தாராபுரம் அடுத்த கொழிஞ்சிவாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இலவச கண் மருத்துவ முகாமில், கிட்டப்பார்வை, தூரப்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு உடனடியாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு பகுதியில் உள்ள கொழிஞ்சி வாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்தியா விஷன் இன்ஸ்டியூட் மற்றும் jsw இணைந்து நடத்திய இந்த முகாமில், கிட்டப் பார்வை, தூரப் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச கண் கண்ணாடி உடனடியாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் பாபு கண்ணன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்வில், நகர்மன்ற உறுப்பினர்கள் கல்பனா, முத்து லட்சுமி, பழனிச்சாமி, வார்டு செயலாளர் முருகேசன், மயில்சாமி, கண் மருத்துவர் பார்த்தசாரதி மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்தியா விஷன் இன்ஸ்டியூட் மற்றும் jsw இணைந்து நடத்திய இந்த முகாமில், கிட்டப் பார்வை, தூரப் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச கண் கண்ணாடி உடனடியாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் பாபு கண்ணன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்வில், நகர்மன்ற உறுப்பினர்கள் கல்பனா, முத்து லட்சுமி, பழனிச்சாமி, வார்டு செயலாளர் முருகேசன், மயில்சாமி, கண் மருத்துவர் பார்த்தசாரதி மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.