தபெதிக பொதுச்செயலாளர் மனைவி மறைவு - திமுக எம்பி, அமைச்சர் அஞ்சலி

தந்தை பெரியார் திராவிட கழகப் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணனின் மனைவி வசந்தியின் உடலுக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்.பி ஆ.ராசா எம்பி உள்ளிட்ட பலர் மலரஞ்சலி.


கோவை: கோவை காந்திபுரத்தில் வசித்து வந்த தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனின் மனைவி வசந்தி இன்று காலமானார்.



அவரது உடலுக்கு திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி, அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, திமுக மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

மேலும், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, துணைமேயர் வெற்றிச்செல்வன், பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கொளத்தூர் மணி, பேரறிவாளன், அற்புதம்மாள் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.



இதைத் தொடர்ந்து, காந்திபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பாப்ப நாயக்கன் பாளையத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் நடைபெற்றது.

இறுதி ஊர்வலத்தில் திமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...