கோவையில் தாத்தா, பாட்டிகள் தினம் - பாத பூஜை செய்து ஆசிர்வாதம் பெற்ற குழந்தைகள்!

கோவையில் முதியோர்களை போற்றும் வகையில், குழந்தைகள் தங்களது தாத்தா பாட்டிகளை பள்ளிக்கு அழைத்து வந்து, பாதபூஜை செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: மாறி வரும் நவீன உலகில் கூட்டுக்குடும்ப முறை மெதுவாக குறைந்து வருகிறது.



இந்நிலையில், கூட்டு குடும்ப முறையை போற்றும் விதமாகவும், பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், கோவைபுதூர் ஆஸ்ரம் பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டது.



அதில், பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகள் தங்களது தாத்தா பாட்டிகளை பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களுக்கு பாதபூஜை செய்தனர்.

தொடர்ந்து, தாத்தா பாட்டி மற்றும் பேரன், பேத்திகளுக்கு உள்ள புரிதலை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகளும் நடைபெற்றன.

இது குறித்து பள்ளியின் நிர்வாக இயக்குனர் கவுரி உதயேந்திரன் கூறுகையில், கூட்டு குடும்ப முறைகள் தற்போது குறைந்து வரும் நிலையில், பள்ளியில் பயிலும் குழந்தைகள் உறவினர்களின் அருமை மற்றும் பாரம்பரிய முறைகள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதாக தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...