குடியிருப்பு பகுதிகளுக்கு பட்டா வழங்கக் கோரி அண்ணாநகர் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டம், சிங்காநல்லூர் அருகே அமைந்துள்ள அண்ணாநகர் பகுதி மக்கள் தங்களது குடியிருப்பு பகுதிக்கு பட்டா வழங்க வேண்டும் என இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் அருகே அண்ணா நகர் பகுதியில் பல ஆண்டுகளாக நாங்கள் வசித்து வருகிறோம். மேலும், நாங்கள் மிகவும் வறுமையில் வாடி வருவதோடு எங்களுக்கு சொந்தமாக எவ்வித இருப்பிடமும் இல்லாமல் உள்ளோம். 

மேலும், நாங்கள வசிக்கும் குடியிருப்புகளுக்கு மின்சார வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. 

இந்நிலத்தில் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வந்தோம்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 10ம் தேதியன்று கோவை மாவட்ட நொய்யல் கிழக்குப் பிரிவு உதவிப்பொறியாளர் எங்களுடைய இடத்தினை 21 நாட்களுக்குள் காலிசெய்ய வேண்டும் என அறிவிப்பு கடிதம் கொடுத்தார்.

எங்களுக்கு இதைவிட்டால் வேறு  குடியிருப்புகள் கிடையாது. எனவே நாங்கள் தற்போது வசிக்கும் பகுதியில் வீடுகளுக்கான பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...