தாராபுரத்தில் ரேக்ளா பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்.! - பார்வையாளர்கள் உற்சாகம்..!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ரேக்ளா கிளப் மற்றும் விவசாயிகள் இணைந்து 10ஆண்டாக நடத்திய ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகளால் பார்வையாளர்கள் உற்சாகமடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 10வது ஆண்டாக ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. திரு ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரி அருகில் இன்று காலை 6.30 அளவில் இந்தப் போட்டி தொடங்கியது.



இந்தப் போட்டியை திரு ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் தாளாளரும் பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.என். வேணுகோபாலு தொடங்கிவைத்தார்.

திமுக மாவட்ட பிரதிநிதி ஆபீஸ் தோட்டம் செல்லமுத்து மற்றும் நஞ்சியம்பாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் ரஜினி உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.



ரேக்ளா கிளப் மற்றும் விவசாயிகள் சார்பில் 10வது ஆண்டாக நடத்தப்பட்ட இந்த ரேக்ளா பந்தயத்தில் தாராபுரம், பழனி, சத்திரப்பட்டி, திருப்பூர், பொள்ளாச்சி, காங்கேயம், சங்கரண்டாம்பாளையம், புளியம்பட்டி, சோமனூர், அன்னூர், சத்தியமங்கலம், என 50க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து போட்டியாளர்கள் வந்து கலந்துகொண்டனர்.



சுமார் 280 ரேக்ளா வண்டிகளில் இரண்டு மாடுகள் பூட்டப்பட்டு 200 மீட்டர் 300 மீட்டர் என இரு வகைகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது.



ரேக்ளாவில் பங்கேற்ற காளைகள் பந்தய தூரத்தை கடக்க சீறிப்பாய்ந்து சென்றதை சாலையின் இருபுறமும் கூடியிருந்த பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டுரசித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...