தாராபுரத்தில் ரேக்ளா பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்.! - பார்வையாளர்கள் உற்சாகம்..!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ரேக்ளா கிளப் மற்றும் விவசாயிகள் இணைந்து 10ஆண்டாக நடத்திய ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகளால் பார்வையாளர்கள் உற்சாகமடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 10வது ஆண்டாக ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. திரு ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரி அருகில் இன்று காலை 6.30 அளவில் இந்தப் போட்டி தொடங்கியது.



இந்தப் போட்டியை திரு ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் தாளாளரும் பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.என். வேணுகோபாலு தொடங்கிவைத்தார்.

திமுக மாவட்ட பிரதிநிதி ஆபீஸ் தோட்டம் செல்லமுத்து மற்றும் நஞ்சியம்பாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் ரஜினி உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.



ரேக்ளா கிளப் மற்றும் விவசாயிகள் சார்பில் 10வது ஆண்டாக நடத்தப்பட்ட இந்த ரேக்ளா பந்தயத்தில் தாராபுரம், பழனி, சத்திரப்பட்டி, திருப்பூர், பொள்ளாச்சி, காங்கேயம், சங்கரண்டாம்பாளையம், புளியம்பட்டி, சோமனூர், அன்னூர், சத்தியமங்கலம், என 50க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து போட்டியாளர்கள் வந்து கலந்துகொண்டனர்.



சுமார் 280 ரேக்ளா வண்டிகளில் இரண்டு மாடுகள் பூட்டப்பட்டு 200 மீட்டர் 300 மீட்டர் என இரு வகைகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது.



ரேக்ளாவில் பங்கேற்ற காளைகள் பந்தய தூரத்தை கடக்க சீறிப்பாய்ந்து சென்றதை சாலையின் இருபுறமும் கூடியிருந்த பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டுரசித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...