கோவையில் பெண்களுக்கு 'வாரிசு' பட ஸ்பெஷல் ஷோ - விஜய் மக்கள் இயக்கத்தினர் அசத்தல்

கோவை சாவடி பகுதியில் கவிதா சினிமாஸ் திரையரங்கில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் பெண்களுக்கென வாரிசு பட சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.


கோவை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினர் "வாரிசு" பட வெற்றியை கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தலின்படி தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மதுக்கரை ஒன்றிய இளைஞரணி துணை செயாலாளர் ரமேஷ் ஏற்பாட்டில், சாவடி பகுதியில் அமைந்துள்ள கவிதா சினிமாஸ் திரையரங்கில் வாரிசு படத்திற்கு பெண்களுக்கென பிரத்யேக காட்சியை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட இளைஞரணி தலைவர் யுவராஜ், மாணவரணி தலைவர் பாபு,தொண்டரணி தலைவர் விக்கி ஆகியோர் கலந்து கொண்டு, படம் பார்க்க வந்த பெண்களை வரவேற்றனர்.



பெண்களின் பெரும் வரவேற்பை பெற்ற "வாரிசு" படத்தை நூற்றுக்கணக்கான பெண்கள் ஆர்வத்துடன் பார்த்துரசித்தனர்.



இதில், தொண்டரணி அருண் ஈஸ்வர் இளைஞரணி நிர்வாகிகள் மணிகண்டன், மகேஸ்வரன், ப்ரியமுடன் சிவா, மதுக்கரை ஒன்றிய தலைவர் நாகராஜ், செயலாளர் தளபதிமுருகேஷ், கிணத்துக்கடவு ஒன்றிய தலைவர் நாகராஜ், கல்லபுரம் பழனிச்சாமி, தொண்டமுத்தூர் வெள்ளச்சாமி, மதுக்கரை விமல், திருமலையம்பாளையம் அய்யாசாமி, சாவடி சக்திவேல் மற்றும் மகளிரணி நிர்வாகிகள், தலைவர் மகாலட்சுமி, செயலாளர் காளீஸ்வரி, வெண்ணிலா, ஈஸ்வரி, வேலுமணி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...