உடுமலை பேருந்து நிலையம் எதிரில் கட்டப்பட்டுள்ள நடைமேம்பாலத்தை திறக்க கோரிக்கை

உடுமலை பேருந்து நிலையம் எதிரில் பொதுமக்கள் வசதிக்காகக் கட்டப்பட்டுள்ள நடைமேம்பாலத்தை அதிகாரிகள் எப்போது திறப்பார்கள் என ஏக்கத்துடன் காத்திருப்பு.


திருப்பூர்: உடுமலையில் பொதுமக்கள் சாலையைச் சிரமமின்றி கடக்கப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நடைமேம்பாலத்தை திறக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், பேருந்து நிலையம் உள்ளது. இதனால் சாலையைக் கடக்கப் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் அங்கு நடை மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.



இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் உடுமலை-பொள்ளாச்சி சாலை நடுவே நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆனாலும் அது இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படாமல் உள்ளது.



இதனால் மீண்டும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அச்சத்துடனே சாலையைக் கடந்து பேருந்து நிலையம் செல்ல வேண்டியுள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து தெற்கு பக்கமும் செல்ல வேண்டி உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி நடைமேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...