பல்லடம் அருகே பொதுமக்களிடம் நூதன மோசடி - முற்றுகையால் பரபரப்பு

பல்லடத்தில் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நூதன முறையில் மோசடி செய்தவரின் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு.


திருப்பூர்: பல்லடம் அருகே தொழிலதிபர் எனக் கூறிக் கொண்டு பொதுமக்களின் சொத்துப்பத்திரங்களை வாங்கி கடன் பெற்று ஏமாற்றியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள வேலப்பக்கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் தன்னை தொழில் அதிபர் எனக் கூறிக்கொண்டு பலரிடம் நூதன முறையில் பத்திரங்களைப் பெற்றுக்கொண்டு வங்கியில் அடமானம் வைத்து கோடிக்கணக்கில் கடன் பெற்றுக் கொள்வார்.

பின்னர் புதிய தொழில் தொடங்கி முதலீடு செய்தால், அதிகளவில் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி சொற்ப தொகையைப் பாதிக்கப்பட்டவர்களிடம் கொடுத்துவிட்டு கோடிக்கணக்கில் மோசடி செய்ததாகக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.



இந்நிலையில் கோவை,திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்லடம் வடுகபாளையத்தை அடுத்த ஸ்ரீ ஸ்ரீ கார்டன் பகுதியில் வசித்து வரும் சிவக்குமாரின் சகோதரர் விஜயகுமாரின் வீட்டை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பல்லடம் காவல்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பாதிக்கப்பட்டவர்களை காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தினர். இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...