பல்லடம் அருகே குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டுவதைக் கண்டித்து தர்ணா

பல்லடம் அருகே குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டும் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்.


திருப்பூர்: வடுகபாளையம்புதூர் ஊராட்சியில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் தீ வைத்துக் கொளுத்துவதால் சுவாசக்கோளாறு ஏற்படுவதாகப் பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் சல்லடத்தை அடுத்த வடுகபாளையம்புதூர் ஊராட்சி அலுவலகம் அருகே சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.



இந்நிலையில் ஊராட்சி பகுதிகளில் அள்ளப்படும் குப்பைகள் குடியிருப்புக்கு அருகே கொட்டப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்படுவதால் துர்நாற்றம் வீசுவதோடு, சுவாசக்கோளாறு ஏற்படுவதாகக் கூறி ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் மனு அளித்துள்ளனர்.



ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.



இந்நிலையில் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பழைய பொள்ளாச்சி சாலை செல்லும் வழியில் பொதுமக்கள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குப்பைகளை அப்புறப்படுத்தும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...