உடுமலை அருகே சலங்கை மாடுகளுக்குப் பூஜை செய்து கிராம மக்கள்

குடிமங்கலம் அருகே சலங்கை மாடுகளுக்குப் பொதுமக்கள் பால், பழம் வைத்து பூஜை செய்து வழிபாடு.


திருப்பூர்: உடுமலை சுற்றுவட்டாரப் பகுதியில் கிராமங்கள் தோறும் இசைக்கேற்ப ஆடும் சலங்கை மாடுகளுக்குக் கிராம மக்கள் பூஜை செய்து வழிப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இசை கேட்ப ஆடும் வகையில், மார்கழி மாதம் முழுவதும் மாடுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வகை மாடுகள் சலங்கை மாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு கிராமத்திற்கும் பொதுவாக வளர்க்கப்படும் சலங்கை மாடுகள் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுவதில்லை, கோவிலுக்குச் சொந்தமானது என்பதைக் குறிக்கும் வகையில் மாடுகளின் மீது சூலாயுதம் போன்ற குறிகள் காணப்படுகின்றன.

மாட்டுப்பொங்கல் அன்று பயிற்சி அளிக்கப்பட்ட சலங்கை மாடுகளுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரண்டு குச்சிகளைக் கையில் வைத்து ஆள் கொண்ட பால கோவிலுக்குக் கொண்டு சென்று ஆடுகின்றனர்.



பின்னர் சலங்கை மாடுகளை தங்களது ஊர்களுக்குக் கொண்டு வந்து பொதுவான இடத்தில் அல்லது கோவில் பகுதியில் வைத்து பால், பழம் பொங்கல், வைத்து வழிபாடு செய்கின்றனர். கிராம மக்கள் சாமி பாடல்கள் தொடர்ந்து பாடும் பொழுது சலங்கை மாடு தானாகவே சென்று பால், பழம், பொங்கலைச் சாப்பிடுவது சிறப்பாகக் கருதப்படுகின்றது.



உடுமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாரம்பரியமாக கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் குடிமங்கலம் அருகே பண்ணைக்கிணற்றில் கிராம மக்கள் பொதுஇடத்தில் பால், பழம், பொங்கல் வைத்து சலங்கை மாடுகளுக்குப் பூஜை செய்து வழிபட்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...