தேசிய அளவிளான மாஸ்டர் ப்ரிகேடு 2017 என்னும் சமையல் துறை மாணவர்களுக்கான சமையல் போட்டி, சங்கரா கல்லூரியின் சமையல் துறை சார்பில் நடத்தப்பட்டது. இதில் இந்தியா முழுவதுமிருந்து சமையல் துறையைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்று தங்களது சமையல் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இப்போட்டியானது பங்குபெறுவோரின் சமையல் திறன், படைப்பாற்றல் மற்றும் குழுவாக செயல்படுவது ஆகிய திறன்களை சோதிக்கும் விதமாக நடத்தப்பட்டது.

பழங்கள் மற்றும் காய்கறிகளில் சிற்பம் செதுக்குதல், இரும்பு சமையலர், போன் கிளேசியர், வினாடி-வினா போட்டி, கட்டுரை சமர்ப்பித்தல், கேக்குகள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரவுகளின் கீழ் நடத்தப்பட்ட இப்போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

கொச்சினில் உள்ள ட்ரிடன்ட் ஓபராய் நட்சத்திர உணவு விடுதியின் தலைமை சமையலராக இருக்கம் பி.குமரன், கோவை லீ மெரிடியன் நட்சத்திர விடுதியின் தலைமை சமையலர் அப்துல் ரகுமான் ஆகியோர் மாணவர்கள் சமைத்த உணவுகளை ருசித்து சிறந்த உணவைச் சமைத்த மாணவருக்கு பரிசினை வழங்கினர்.

இதில் முதல் பரிசை பெங்களூரைச் சேர்ந்த க்ரைஸ்ட் பல்கலைக் கழக மாணவர்களும், இரண்டாம் பரிசை சென்னிஸ் விடுதி மேலாண்மை கல்லூரி மாணவர்களும் வென்றனர். சுழற்கோப்பையை க்ரைஸ்ட் பல்கலைக் கழக மாணவர்கள் வென்றனர்.
சங்கரா கல்விக் குழுமங்களின் இணைச் செயலாளர் சந்தியா ராமச்சந்திரன், துணை இணைச் செயலாளர் நித்யா ராமச்சந்திரன் மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் எச்.பாலகிருஷ்ணன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.