திருப்பூர் உடுமலை அருகே காட்டுப்பன்றியால் விபத்து - ஒருவர் பலி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாலையின் குறுக்கே கூட்டமாக ஓடிய காட்டுப்பன்றிகளால் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தும்பலபட்டியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் வேலை நிமித்தமாக, தனது நண்பர் அசோக்குமார் உடன் இரவு 10 மணிக்கு கவுண்டனூர்சாலையில் பைக்கில் சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக விளைநிலங்களில் இருந்து காட்டுப்பன்றிகள் கூட்டமாக சாலையின் குறுக்கே ஓடின. இதனால், பைக் நிலைதடுமாறியதால், பிரபாகரன் மற்றும் அசோக்குமார் ஆகியோர் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.



இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர், சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே பிரபாகர் பரிதாபமாக உயிர் இழந்தார். அசோக்குமார் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இது குறித்து குமாரலிங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டுப்பன்றியால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் உடுமலை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...