சூலூர் அருகே கார் விபத்து - ரோட்டரி சங்க மேனாள் தலைவரின் மனைவி பலி

கோவை மாவட்டம் சூலூரில் நிகழ்ந்த கார் விபத்தில், தாராபுரம் ரோட்டரி சங்கத்தின் மேனாள் தலைவர் சுந்தர்ராஜனின் மனைவி உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ரோட்டரி சங்கத்தின் மேனாள் தலைவரும், இன்டர்நேஷனல் ரோட்டரி கிளப் ஏசியா கண்டத்தின் தலைவருமாக இருந்தவர் டாக்டர் சுந்தர்ராஜன்.



இவர், தமது மனைவி பிரிசில்லாவுடன் கோவையிலிருந்து தாராபுரம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். சூலூர் சாலையில் வந்துகொண்டிருந்தபோது, அந்த கார் திடீரென விபத்துக்குள்ளானது.

இதில், சுந்தர்ராஜனின் மனைவி பிரிசில்லா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டாக்டர் சுந்தர்ராஜன் பலத்த காயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், தாராபுரம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் மறைந்த பிரிசில்லா உடலுக்கு மலர் வளையம் வைத்து ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...