அரசு அதிகாரிகளை மிரட்டும் தோரணையில் பேசும் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார்.
கோவை: தமிழ்நாடு முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு கருத்துக்களைப் பரப்பி வரும் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் புகார் அளித்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த திமுக பிரமுகரும், திரைப்பட இயக்குநருமான ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் குறித்து சமீப காலமாகச் சவுக்கு சங்கர் என்பவர் அவதூறான கருத்துக்களையும், போலியான ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து சமூக வலைத்தளத்தில் பேசி, பரப்பி வருவதாகவும், தனிப்பட்ட நபர்களின் தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், இம்மாதிரி தமிழக முதல்வர் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளைக் கூறிவரும் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடர்ந்து அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறான கருத்துக்களையும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் சவுக்கு சங்கர் கூறி வருவதாகவும், காவல்துறை உயர் அதிகாரிகளையே அவர் மிரட்டும் தோரணையில் பேசி வீடியோ வெளியிடுவதாகவும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தனிப்பட்ட நபர்களின் சொத்து விவரங்கள் உள்ளிட்டவற்றைக் குறித்தும் அவர் தேவையற்ற விமர்சனங்களைச் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இம்மாதிரியான அவதூறான விமர்சனங்களைச் செய்து வரும் சவுக்கு சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கோவையைச் சேர்ந்த திமுக பிரமுகரும், திரைப்பட இயக்குநருமான ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் குறித்து சமீப காலமாகச் சவுக்கு சங்கர் என்பவர் அவதூறான கருத்துக்களையும், போலியான ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து சமூக வலைத்தளத்தில் பேசி, பரப்பி வருவதாகவும், தனிப்பட்ட நபர்களின் தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், இம்மாதிரி தமிழக முதல்வர் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளைக் கூறிவரும் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடர்ந்து அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறான கருத்துக்களையும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் சவுக்கு சங்கர் கூறி வருவதாகவும், காவல்துறை உயர் அதிகாரிகளையே அவர் மிரட்டும் தோரணையில் பேசி வீடியோ வெளியிடுவதாகவும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தனிப்பட்ட நபர்களின் சொத்து விவரங்கள் உள்ளிட்டவற்றைக் குறித்தும் அவர் தேவையற்ற விமர்சனங்களைச் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இம்மாதிரியான அவதூறான விமர்சனங்களைச் செய்து வரும் சவுக்கு சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.