முதல்வர் மீது அவதூறு கருத்து - சவுக்கு சங்கர் மீது கோவை காவல்நிலையத்தில் புகார்!

அரசு அதிகாரிகளை மிரட்டும் தோரணையில் பேசும் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார்.


கோவை: தமிழ்நாடு முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு கருத்துக்களைப் பரப்பி வரும் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் புகார் அளித்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த திமுக பிரமுகரும், திரைப்பட இயக்குநருமான ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.



அதில், தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் குறித்து சமீப காலமாகச் சவுக்கு சங்கர் என்பவர் அவதூறான கருத்துக்களையும், போலியான ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து சமூக வலைத்தளத்தில் பேசி, பரப்பி வருவதாகவும், தனிப்பட்ட நபர்களின் தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், இம்மாதிரி தமிழக முதல்வர் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளைக் கூறிவரும் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடர்ந்து அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறான கருத்துக்களையும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் சவுக்கு சங்கர் கூறி வருவதாகவும், காவல்துறை உயர் அதிகாரிகளையே அவர் மிரட்டும் தோரணையில் பேசி வீடியோ வெளியிடுவதாகவும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தனிப்பட்ட நபர்களின் சொத்து விவரங்கள் உள்ளிட்டவற்றைக் குறித்தும் அவர் தேவையற்ற விமர்சனங்களைச் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இம்மாதிரியான அவதூறான விமர்சனங்களைச் செய்து வரும் சவுக்கு சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...