கோவை புரூக் பீல்டு சாலை மாதிரி ரவுண்டானாவில் திடீர் ஆய்வு!

கோவை புரூக் பீல்டு சாலையில் மாதிரி ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளதைத் துணை ஆணையாளர் மதிவாணன் ஆய்வு.


கோவை: கோவை புரூக் பீல்டு சாலை சந்திப்பில் பொதுமக்கள் சிக்னலுக்காக காத்திருக்காமல் விரைவாகச் சாலையைக் கடக்கச் சோதனை முயற்சியாக மாதிரி ரவுண்டானா அமைக்கப்பட்டது.



கோவை புரூக் பீல்டு சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், மக்கள் சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் முயற்சியாகக் கோவை மாநகர காவல் போக்குவரத்து பிரிவு சார்பாகச் சோதனை முயற்சியாக, சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் மனுநீதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் இணைந்து மாதிரி ரவுண்டானா அமைத்தனர்.

அதற்கான சோதனை ஓட்டம் மாலை 4 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதனால் கிழக்கு திருவேங்கடசாமி சாலை வழியாக புரூக் பீல்டு செல்லும் வாகன ஓட்டிகள், இடது புறமாகத் திரும்பி சிந்தாமணி ரவுண்டானா வழியாக புரூக் பீல்டு சாலைக்குச் செல்லுமாறு போக்குவரத்து போலீசார் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



மேலும் கிழக்கு திருவேங்கடசாமி சாலையிலிருந்து காமராஜபுரம் வழியாக புரூக் பீல்டு சாலை செல்லும் பாதை தடை செய்யப்பட்டுள்ளது. அங்குச் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப பயணம் மேற்கொள்ளலாம்.

எனவே பொதுமக்கள் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சிக்குப் பொதுமக்களின் ஆதரவு அளிக்குமாறு போக்குவரத்துத் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



இந்த மாதிரி ரவுண்டானாவை துணை ஆணையாளர் மதிவாணன் ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...