சூலூரில் கார்கள் நேருக்கு நேர் மோதல் - இரண்டு பெண்கள் பலி

கோவை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் முன்சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலி.


கோவை: சூலூரில் நடந்த கார் விபத்தில் இரண்டு பெண்கள் பலி மற்றும் ஏழு பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் காங்கேயம்பாளையம் பகுதியை அடுத்த ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் தனது மனைவி மற்றும் இருமகளுடன் கோவையை நோக்கிக் காரில் சென்றுள்ளார். அப்போது கோவையிலிருந்து டாக்டர் மோகன் என்பவர் காரில் தனது தாய், தந்தையுடன் தாராபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.



இந்நிலையில் ஜெயராமன் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பைத் தாண்டி டாக்டர் மோகன் ஓட்டி சென்ற காரின் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரண்டு கார்களும் சேதமடைந்தன.



கார்களில் பயணம் செய்தவர்கள் படுகாயம் அடைந்தனர். அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் டாக்டர் மோகனின் தாய் பிரிசில்லா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



இதேபோல் ஜெயராமனின் மனைவி அமுதா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...