குடியரசு விழா முன்னெச்சரிக்கை - கோவை நகரில் 1500 போலீசார் குவிப்பு!

குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவை மாநகரம் முமுழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், 1500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாநகரம் முழுவதும் குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை ரயில் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யும் ஸ்கேனர் கருவிகளின் செயல்பாடு மற்றும் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் அவர் கேட்டறிந்தார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் பாலகிருஷ்ணன், வரும் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் மாநகரம் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும், மோப்பநாய் உதவியுடன் கோவை ரயில் நிலையம், வடகோவை, போத்தனூர் ரயில் நிலையங்கள் மற்றும் முக்கியமான பேருந்து நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

முக்கிய குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 11 இடங்களில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. அதேபோல், மாநகரம் முழுவதும் உள்ள தனியார் விடுதிகளில் வந்து தங்கும் நபர்கள் குறித்த முழுவிவரங்களை சேகரிக்குமாறு விடுதி உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழுமையான தகவல்களை பெறாமல் தங்க வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...