தமிழகத்தின் தற்போதைய சூழ்நிலைக்கு பாஜக வின் சூழ்ச்சியே காரணம் என கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்,
பொள்ளாச்சி காளியப்ப கவுண்டன் புதூரில் சுயமரியாதை சமதர்ம இயக்கத்தின் தலைவர் காசு.நாகராசன் ஆதிக்கசாதியினரால் தாக்கப்பட்டதற்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர், இந்த நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் சாதி மதவாத ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் மதவாத ஆதிக்க வன்முறைகளை தடுக்க வேண்டும், அரசும் காவல் துரையினரும் இதற்கு துணை போக கூடாது என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிட விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தற்போதைய அரசியல் சூழ்நிலை பொறுத்தவரையில் தமிழகத்தில் பாஜக நேரடியாக ஆட்சிக்கு வரமுடியாது என்பதால், இது அவர்கள் செய்யும் சூழ்சி எனவும், முதல்வர் போட்டியில் இருக்கும் இருவர் மீதும் எங்களுக்கு நல்ல நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மத வெறியர்கள் இங்கு காலூன்றுவதற்க்கு எதிரான கருத்தை நாங்கள் பதிவு செய்வோம் என்றார்.