காரமடை நகராட்சியில் குப்பை அள்ளுவதற்கான ஒப்பந்த தீர்மானம் நிறுத்தி வைப்பு

கோவை மாவட்டம் காரமடை நகராட்சியில் குப்பைகள் அள்ளும் விவகாரத்தில் தனியார் நிறுவனத்திற்குச் சாதகமான ஒப்பந்த தீர்மானம் நிறுத்தி வைப்பு.


கோவை: காரமடை நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அவசர கூட்டத்தில் துப்புரவுப் பணியாளர்களின் வேலைவாய்ப்பினை பறிக்கும் வகையில் குப்பைகளைச் சேகரிக்கத் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விட அனுமதிக் கோரி கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் காரமடை நகராட்சியின் அவசரக்கூட்டம் நகராட்சி தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த அவசர கூட்டத்தில் ஒரே ஒரு தீர்மானம் மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது.

இதில் நகராட்சியில் உள்ள குப்பைகளைச் சேகரிக்க தற்போது 120 தற்காலிக பணியாளர்களும், 30 நிரந்தர பணியாளர்கள் உள்ள நிலையில் அடுத்த மாதம் முதல் காரமடை நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் குப்பைகளைச் சேகரிக்கத் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விட அனுமதி கோரப்பட்டது.



இதனால் ஏற்கனவே பணியில் உள்ளத் துப்புரவுப் பணியாளர்களின் பணி பாதிக்கப்படுவதுடன் கொரானோ காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியற்றியவர்களுக்கே இந்த நிலையா? என அனைத்து கவுன்சிலர்களும், தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தீர்மானம் நிறுத்தி வைக்கபட்டுவதாக நகராட்சி தலைவர் உஷா அறிவித்தார்.

இதனையடுத்து துப்புரவுத் தொழிலாளர்களைச் சந்தித்த நகராட்சி தலைவர் உஷா, அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தொழிலாளர்கள் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...