கோவையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் காலை முதலே அக்கட்சி தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அப்போது, அங்கு இருந்த அ.தி.மு.க. உறுப்பினர் அருண் என்பவர், சசிகலாவுக்கு எதிராக பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்தார். மேலும், காலம் தாழ்த்தி வழங்கப்பட்டாலும் இது சரியான தீர்ப்பு என்று கூறினார்.

அருண் பேட்டி கொடுப்பதை கேட்ட அ.தி.மு.க தொண்டர்கள் அவரை இதய தெய்வம் மாளிகையை விட்டு விரட்டியடித்தனர். வெளியேற்றப்பட்ட அருண் மீண்டும் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், 'அடிமட்டத்தொண்டன் தான் அ.தி.மு.க வின் பலம். தங்கள் கருத்துக்களை கூற எல்லோருக்கும் உரிமை உள்ளது. அதன்படி தான் எனது கருத்தை கூறினேன். ஆனால், என்னை விரட்டியடித்தனர். எங்கள் கட்சியில் புல்லுருவிகள் பலர் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.