கோத்தகிரி அருகே மாடு மேய்க்கச் சென்ற விவசாயி - மறைந்திருந்து தாக்கிய சிறுத்தை!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே மாடு மேய்க்கச் சென்றவரை, சிறுத்தை தாக்கியதில் படுகாயம். கோத்தகிரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.



நீலகிரி: கோத்தகிரி அருகே சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்தவருக்கு, அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் குடியிருப்பு பகுதிக்கு யானை, கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் வருவது அதிகரித்துள்ளது.



இந்த நிலையில் கோத்தகிரி அருகே கீழ் கோத்தகிரி பரவக்காடு பகுதியில் பன்னீர் செல்வம் (48) என்பவர் இன்று காலை அவரது மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது புதரில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று பன்னீர் செல்வத்தை தாக்கியது. அவரின் அலரல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து சிறுத்தையை விரட்டினர்.



படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



பன்னீர் செல்வத்திற்கு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...