மேட்டுப்பாளையத்தில் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரையில் வழக்கறிஞரை போலீசார் தாக்கியதைக் கண்டித்து மேட்டுப்பாளையத்தில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.


கோவை: மேட்டுப்பாளையத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீதிமன்றத்தைப் புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் கீரைத்துரை காவல்நிலைய போலீசார் ராஜேஷ், ஸ்டாலின் என்ற இரண்டு வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்து இருவரையும் போலீசார் கடுமையாகத் தாக்கியதாகவும், இதில் அவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.



இதனைக் கண்டித்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பின் சார்பில் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு உடனடியாக வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறையினரை கைது செய்ய வேண்டும், அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்களுக்கு தொழில் பாதுகாப்பு மசோதாவை உடனடியாக சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...