திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் தீவிர சோதனை

குடியரசு தின விழாவை முன்னிட்டு திருப்பூர் ரயில் நிலையத்தில் மோப்பநாய்களைக் கொண்டு சோதனை. பயணிகளின் உடைமைகளைச் சோதனை செய்த பின்னரே அனுமதி.


திருப்பூர்: 74ஆவது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் பின்னலாடை நகரமாகத் திகழ்வதால் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான தொழிலாளர்கள் நாள்தோறும் திருப்பூருக்கு ரயில் மூலம் வருகின்றனர்.



எனவே குடியரசு தினத்தை ஒட்டி எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது, என்பதற்காக ரயில் நிலையத்தின் உள்ளே வரும் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு சோதனை செய்து பின்னர் ரயில் நிலையம் உள்ளே அனுமதித்து வருகின்றனர்.



அதுமட்டுமின்றி ரயில் மூலம் திருப்பூர் வரும் பயணிகளையும் சோதனை செய்த பின்னரே வெளியே செல்ல அனுமதித்து வருகின்றனர். மேலும் ரயில் நிலையத்தில் மோப்பநாய்களைக் கொண்டு சோதனை நடத்தினர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மாணவர்களின் பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...