வால்பாறையை அடுத்துள்ள மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட நல்லமுடி எஸ்டேட் காட்சிமுனைப் பகுதியில் நேற்று காலை 11 மணிமுதல் முதல் வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்து மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது.

இந்த காட்டுத் தீயானது தேயிலைத் தோட்டத்திற்குள் பரவி விடும் சூழ்நிலை இருப்பதால் எஸ்டேட் நிர்வாகம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைக் கொண்டு தீ பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். காலை முதல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் நிலையில் மாலையில் தான் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
