கோவையில் பிணையப் பத்திர உத்தரவை மீறிய இளைஞருக்கு 294 நாட்கள் சிறை

கோவை வடவள்ளியில் பிணையப் பத்திர உத்தரவை மீறிய இளைஞரை 294 நாட்கள் சிறையில் அடைக்க பேரூர் நிர்வாகத்துறை நடுவர் உத்தரவு.


கோவை: கோவையில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 'சுள்ளான்' என்ற வாலிபர் நன்னடத்தை பிணையப் பத்திரத்தை மீறியதால்,294 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை வடவள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த தீபக் என்ற சுள்ளான் (21) என்பவரை போலீசார் பலமுறை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி தீபக் பேரூர் நிர்வாகத்துறை நடுவர் முன்னிலையில் நன்னடத்தை பிணையப் பத்திரத்தில் கையெழுத்திட்டார். மேலும் இனி இம்மாதிரியான தவறுகளைச் செய்ய மாட்டேன் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் கடந்த டிசம்பர் மாதம் தீபக் நன்னடத்தை பிணையப் பத்திர உத்தரவுகளை மீறி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார். அவரை வடவள்ளி போலீசார் கைது செய்த சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பிணையப் பத்திரத்தை மீறிய குற்றத்திற்காக,செவ்வாய்க்கிழமை முதல் அடுத்த 294 நாட்கள் தீபக்கைச் சிறையில் வைக்கப் பேரூர் நிர்வாகத்துறை நடுவர் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் கோவை மத்தியச் சிறையில் உள்ள தீபத்துக்கு வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...