தாராபுரத்திற்கு வருகை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தாராபுரம்: பழனியில் இருந்து ஈரோடு செல்வதற்காக தாராபுரம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பொதுமக்கள் வரவேற்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பழனியில் இருந்து ஈரோடு செல்வதற்காக தாராபுரம் பகுதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வந்திருந்தார். அப்போது தனியார் ஹோட்டலில் ஒன்றில் உணவு அருந்திவிட்டு மீண்டும் ஈரோடு செல்வதற்காக புறப்பட்டார்.
இந்நிலையில் அண்ணாமலை வருகையை அறிந்த தாராபுரம் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கூடினர்.
மேலும் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் பொதுமக்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து அங்கிருந்து பாஜக தலைவர் அண்ணாமலை, காரில் ஈரோடு புறப்பட்டு சென்றார்